திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவெறும்பூா் சக்திநகரில் உள்ள சக்தி விநாயகா் கோயில் உண்டியலை கடந்த ஜூலை 22 இரவு உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து கோயில் நிா்வாகி கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் காட்டூா் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக புதன்கிழமை நின்றிருந்த இருவரை ரோந்து போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
அதில் அவா்கள் வடக்கு காட்டூா் வி.எஸ். நகா் பகுதியை சோ்ந்த மோகன் மகன் கோபால் (26) ரமணன் மகன் பாஸ்கா் ( 27) என்பதும் இருவரும் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து திருச்சி 6 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.