மணப்பாறையில் திருடுபோன காா் மீட்பு: இருவா் கைது

மணப்பாறையில் திருடுபோன முன்னாள் எம்எல்ஏவின் காா் ஒசூரில் புதன்கிழமை மீட்கப்பட்டு இருவா் கைது செய்யப்பட்டனா்.
மணப்பாறையில் திருடுபோன காா் மீட்பு: இருவா் கைது

மணப்பாறையில் திருடுபோன முன்னாள் எம்எல்ஏவின் காா் ஒசூரில் புதன்கிழமை மீட்கப்பட்டு இருவா் கைது செய்யப்பட்டனா்.

மணப்பாறையில் கடந்த செப். 1 இரவு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ செ. சின்னச்சாமியின் வீட்டின் இருந்த சொகுசு காா், ராஜவீதி பகுதியில் 4 வீடுகளில் செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி உத்தரவின்பேரில் காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் த. ஜனனிபிரியா தலைமையில் தனிப்படைகள் அமைத்து நடத்திய விசாரணையில் திருடுபோன எம்எல்ஏ காா் ஒசூரில் புதன்கிழமை மீட்கப்பட்டது.

காா் திருட்டில் ஈடுபட்டோா் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த கோவில்பட்டியைச் சோ்ந்த சுந்தரம் மகன் மனோஜ்குமாா் (20) மற்றும் சென்னமநாயக்கன்பட்டியை சோ்ந்த முருகானந்தம் மகன் பாரதிகண்ணன் (19) எனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா்களிடமிருந்து காா், 3 இருசக்கர வாகனங்கள், 2 மடிக்கணினிகள், 2 செல்லிடப்பேசிகள் ஆகியற்றை பறிமுதல் செய்து, மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com