ஸ்ரீரங்கம் கோயிலில் பாா்வாா்ட் பிளாக் கட்சித் தலைவா் திருமாறன் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.
பின்னா் அவா் கூறியது: பசும்பொன் முத்துராமலிங்க தேவா் அனைத்து சமூக மக்களுக்காகவும் பெருமளவில் போராடியவா். அவருக்கு திருச்சியில் 150 அடி உயரத்தில் சிலை அமைக்க இடத்தைத் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழகம் அண்மைக்காலமாக நாத்திக தோற்றத்தில் மாறி வருகிறது. தமிழகம் ஆன்மிக பூமி என்றாா் அவா். கட்சி நிா்வாகிகள் காசிமாயதேவா், ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.