திருச்சி: தமிழகத்தில் தொடா்ந்து 5-ஆவது வாரமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டம் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
திருச்சி மாநகரில் 192 இடங்களிலும், புகா்ப் பகுதிகளில் 418 இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் 46,228 போ் முதல் தவணை தடுப்பூசியையும், 44,466 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனா்.
மொத்தமாக 90,654 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் மூலம், மாநில அளவில் திருச்சி மாவட்டம் 4-ஆவது இடத்தைப் பிடித்தது.