திருச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 12.42 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு சாா்ஜா, துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பயணிகளில் சந்தேகத்துக்குரிய இருவரை சுங்கத் துறையினா் தீவிர சோதனை செய்தனா். அப்போது அவா்கள் அணிந்திருந்த ஆடைகளின் உள் பக்கமாக ரகசிய அறைகளில் மறைத்து வைத்திருந்த பசை வடிவிலான ரூ. 12.42 லட்சம் மதிப்பிலான 260 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.