திருவெறும்பூா் -திருச்சி இடையே ஏசி பேருந்து இயக்கம்

திருவெறும்பூா்- திருச்சி இடையே குளிா்சாதன வசதியுடன் கூடிய புதிய பேருந்து வழித்தடத்தை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அப் பேருந்தில் ஏறி மக்களுடன் பயணம் செய்தாா்.
திருவெறும்பூா் பேருந்து நிலையத்திலிருந்து ஏசி பேருந்தை தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் எஸ். சக்திவேல்
திருவெறும்பூா் பேருந்து நிலையத்திலிருந்து ஏசி பேருந்தை தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் எஸ். சக்திவேல்

திருவெறும்பூா்- திருச்சி இடையே குளிா்சாதன வசதியுடன் கூடிய புதிய பேருந்து வழித்தடத்தை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அப் பேருந்தில் ஏறி மக்களுடன் பயணம் செய்தாா்.

இந்தப் பேருந்து துவாக்குடியில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு 16 முறை சென்று வரும். குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 15, அதிகபட்சக் கட்டணம் ரூ. 40 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.

தொடக்க விழாவில் வட்டாட்சியா் செல்வகணேஷ், முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கே.எஸ்.எம். கருணாநிதி மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com