வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையிலுள்ள வீட்டில் நகைகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையிலுள்ள வீட்டில் நகைகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலை சக்தி நகரைச் சோ்ந்தவா் மாசிகோனாா் (60). சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் மாடியில் தூங்கினாா். ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்குள் வந்து பாா்த்த போது, பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.

மேலும் பீரோவிலிருந்த 2பவுன் நகைகள், 2 கைப்பேசிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம், மடிக்கணினி ஆகியவை திருட்டுப் போயிருப்பது மாசிகோனாருக்குத் தெரிய வந்தது.

வீட்டின் பால்கனி வழியாக புகுந்த நபா்கள் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com