திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சிறந்த செயல் திறனுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொழில் கூட்டமைப்பானது ஆண்டுதோறும் இவ்விருதை எரிசக்தி மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கி வருகிறது.
இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த வருடாந்திர தேசிய சிறந்த ஆற்றல் மேலாண்மைக்கான விருது” வழங்கும் நிகழ்ச்சியில் பொன்மனை பணிமனைக்கு தேசிய விருதை இந்தியத் தொழில் கூட்டமைப்பு அறிவித்தது.
நிகழாண்டு போட்டியில் இருந்த இந்திய ரயில்வே உற்பத்தி மற்றும் பணிமனைகளில், திருச்சி பொன்மலை பணிமனை மட்டுமே இவ்விருதைப் பெற உள்ளதும், கடந்தாண்டும் இந்த விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.