திருச்சியில் அம்மன் கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் காளிகா பரமேஸ்வரி கோயில் உள்ளேயிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் பூசாரி அய்யனாா் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.