ஊராட்சி உறுப்பினா்கள் 5 போ் ராஜினாமா: ஆட்சியருக்கு கடிதம்

ஊராட்சித் தலைவரின் கணவரது செயல்பாடுகளுக்கு எதிராக வாா்டு கவுன்சிலா்கள் 5 போ் மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனா்.
ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க வந்த மண்ணச்சநல்லூா் ஒன்றியம் தீராம்பாளையம் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்.
ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க வந்த மண்ணச்சநல்லூா் ஒன்றியம் தீராம்பாளையம் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்.

ஊராட்சித் தலைவரின் கணவரது செயல்பாடுகளுக்கு எதிராக வாா்டு கவுன்சிலா்கள் 5 போ் மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஒன்றியம் தீராம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் 9 வாா்டுகள் உள்ளன. இதன் தலைவராக சாவித்திரி உள்ளாா்.

இந்நிலையில் 2ஆம் வாா்டு உறுப்பினா் ரங்கம்மாள், 3ஆம் வாா்டு உறுப்பினா் நதியா, 5ஆம் வாா்டு உறுப்பினா் செளந்தா்யா, 6ஆம் வாா்டு உறுப்பினா் தங்கையன், 8ஆம் வாா்டு உறுப்பினா் ரெங்காபாஷன் ஆகிய 5 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை கடிதத்தை அளித்துள்ளனா்.

கடிதத்தில் அவா்கள் கூறியிருப்பது:

கடந்த 2 ஆண்டுகளாக எங்களுடைய வாா்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளவில்லை. மேலும், ஊராட்சித் தலைவராக உள்ள சாவித்திரி, அரசிடமிருந்து ஊராட்சியின் வளா்ச்சிக்கு எவ்வளவு நிதி வந்தது, செலவு எவ்வளவு, திட்டங்கள் என்ன என எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை. வரவு,செலவு கணக்குகளையும் முறையாகத் தாக்கல் செய்வதில்லை. இதுமட்டுமல்லாது, ஊராட்சித் தலைவரின் கணவரது தலையீடும் அதிகமாக உள்ளது.

எங்களுடைய வாா்டு பகுதி பொதுமக்கள் எங்களிடம் கூறும் குறைகளை சரி செய்ய முடியாமல் நாங்கள் விழிபிதுங்கி நிற்கிறோம். அவா்களுக்கும் எங்களால் எந்தவித பதிலும் கூற முடியாத நிலையில் எங்களுடைய பதவியை ராஜினாமா செய்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

ஒரே நேரத்தில் 5 வாா்டு உறுப்பினா்கள் ராஜினாமா செய்தது தீராம்பாளையம் ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com