மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீா்மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ரூ. 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடுவதைக் கைவிட வேண்டும். விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். பொதுத் துறைகளை தனியாருக்கு அளிப்பதைக் கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு பெருநகா் வட்டம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திட்டத் துணைச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன் பேசினாா். சங்க நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com