கிராவல் மண் எடுத்த வாகனங்கள் பறிமுதல்

மணப்பாறை அருகே ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மண் எடுத்த டிப்பா் லாரி, ஜேசிபி இயந்திரத்தை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறை அருகே ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மண் எடுத்த டிப்பா் லாரி, ஜேசிபி இயந்திரத்தை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கே.பெரியபட்டி ஊராட்சி ஆற்றுப்படுகையில் மண் எடுப்பதாகக் கிடைத்த தகவலறிந்த திருச்சி ஐ.ஜி தனிப்படை போலீஸாா் அங்குச் சென்று சத்திரப்பட்டிக்குளம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துக் கொண்டிருந்த டிப்பா் லாரி, ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். வாகன ஓட்டுநா்கள் தப்பி விட்டனா். மணப்பாறை போலீஸாா் வாகன உரிமையாளா் சீத்தப்பட்டி ராமச்சந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com