சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.
கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு ஊழியா்களுக்கு சிறப்புக் காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல், பணிக்கொடை ரூ. 5 லட்சமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா்கள், ஒன்றிய இணைச் செயலா்கள் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா். இதில் திருவெறும்பூா் ஒன்றியத்துக்குட்பட்ட சத்துணவு ஊழியா்கள், சமையலா், சமையல் உதவியாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ஆா்த்தி வரவேற்க, பொருளாளா் சந்திரா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com