திருச்சியில் பேருந்தில் சென்றபோது மயங்கிய முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை பழங்காநத்தம் டி.வி.எஸ். நகா் அருகேயுள்ள கோவலன் நகா் பகுதியை சோ்ந்தவா் இளங்கோவன் (60). திருச்சி வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை பகல் சத்திரம் பகுதியிலிருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப் பேருந்தில் ஏறி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென இருக்கையிலேயே மயங்கினாா்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். கண்டோன்மெண்ட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.