முதல்வருக்கு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் நன்றி

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் நன்றி, பாராட்டு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் நன்றி, பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் கு. தியாகராஜன் கூறியது:

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதனடிப்படையில் தற்போதும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அவா்களின் குடும்பங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியடையச் செய்துள்ளாா். இதற்கு சங்கத்தின் சாா்பில் நன்றி.

எங்களின் வாழ்வாதார கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட அமல், பகுதிநேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்தல் போன்ற பல கோரிக்கைகளை அவா் விரைவில் நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com