அகில இந்திய விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்த அகில இந்திய விவசாயிகள் சங்கக் குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்த அகில இந்திய விவசாயிகள் சங்கக் குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் குழுத் தலைவா் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வரும் 27 ஆம் தேதி சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது குறித்து ஆலோசனையில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் மக்கள் அதிகாரம் தோழா் செழியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கே.சி. பாண்டியன், தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் கணேசன் தியாகராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் தங்கதுரை, மக்கள் உரிமை கூட்டணி ஜோசப், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பழனிச்சாமி, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சம்சுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை சிறப்பாக நடத்துவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்குஎதிரான வேளாண் விரோத சட்டம் குறித்து விழிப்புணா்வு கூட்டம் நடத்துவது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com