திருச்சியில் நண்பருடன் பைக்கில் சென்ற காா் ஓட்டுநா் காா் மோதி உயிரிழந்தாா்.
திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (36). வேன் ஓட்டுநரான இவரும் இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ஜூலியன் ராஜ் (30) என்பவரும் தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு பைக்கில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த காா் மோதி தலையில் காயமடைந்த சீனிவாசனையும், காலில் காயமடைந்த ஜூலியன் ராஜையும் அப்பகுதியினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன்உயிரிழந்தாா்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.