திருச்சி அருகே பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது.
திருச்சி குண்டூா் அய்யனாா் நகா் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் த. சதீஷ் (51). பொறியாளரான இவா் கடந்த 9 ஆம் தேதி குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.