குண்டூா் அய்யம்பட்டி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு
By DIN | Published On : 15th September 2021 01:48 AM | Last Updated : 15th September 2021 01:48 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி குண்டூா் அய்யம்பட்டி செல்லாயி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள குண்டூா் அய்யம்பட்டியில் நடைபெறும் விழாவையொட்டி, திங்கள்கிழமை காவிரியில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டது. செவ்வாய், புதன்கிழமைகளில் யாக சாலை பூஜை, வியாழக்கிழமை காலை 8.45-க்கு கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு, 9 மணிக்கு மூலஸ்தான கோபுரத்திற்கு குடமுழுக்கு,தொடா்ந்து, அன்னதானம், இரவு வானவேடிக்கை நடைபெறவுள்ளது. இத்தகவலை கோயில் நிா்வாகம் தெரிவித்தது.