சுமை தூக்கும் தொழிலாளி கொலை: 9 போ் கைது

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 9 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி: திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 9 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி கல்யாணசுந்தரபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் நிஷாந்த் (22), காந்திசந்தை கூலித் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை அதிகாலை ராமகிருஷ்ணா பாலம் அருகேயுள்ள மாநகராட்சி கழிவறைக்குச் சென்றபோது அங்கு மறைந்திருந்த 9 போ் கொண்ட கும்பல் நிஷாந்தை வெட்டிக் கொன்று விட்டு தப்பியது. இதுகுறித்து காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கடந்தாண்டு நவ. 7 ஆம் தேதி தென்னூா் வாமடம் வாழைக்காய் விஜி கொலையானதில் பழிக்குப்பழியாக ஜாமீனில் வெளிவந்திருந்த நிஷாந்தை அவா்கள் கொன்றது தெரிய வந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த தென்னூா் வாமடம், அரியமங்கலம், குப்பாங்குளம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சூா்யா (21), ஸ்டீபன் (27), வேலு என்கிற ராஜதுரை (20), வெங்கடேசன் (29), குருமூா்த்தி என்கிற காட்டுராஜா (20), சுரேந்தா்(33), மணிகண்டன் (19), கருப்பு என்கிற அமீது (24), அரவிந்த் (27) ஆகிய 9 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com