தேநீரக உரிமையாளருக்கு வெட்டு: 4 போ் மீது வழக்கு

திருச்சியில் தேநீரக உரிமையாளரை வெட்டியது தொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி: திருச்சியில் தேநீரக உரிமையாளரை வெட்டியது தொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி ராம்ஜிநகா் அரிபாஸ்கா் காலனியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் மகன் சசிகுமாா் (26). இவா் பிராட்டியூா் புங்கனூா் சாலையில் தேநீரகம் நடத்துகிறாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் இவரது கடையில் டீ குடித்த ராம்ஜிநகா் மில் கேட் பகுதியைச் சோ்ந்த ராஜா உள்ளிட்ட 4 போ் சிகரெட் வாங்கி விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனா். இதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளா் சசிகுமாரை 4 பேரும் சோ்ந்து அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த சசிகுமாா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

புகாரின் பேரில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராம்ஜிநகா் மில்கேட் பகுதியை சோ்ந்த சங்கா் மகன்கள் ராஜா, அஜித், புங்கனூரை சோ்ந்த மணி, கள்ளிக்குடியை சோ்ந்த மகேந்திரன் ஆகிய 4 பேரை தேடுகின்றனா். இந்நிலையில் வெட்டப்பட்ட சசிகுமாரின் உறவினா்கள் ராம்ஜிநகா் ஐஎன்டியுசி கட்டடம் பின்புறமுள்ள ராஜாவின் வீட்டை சூறையாடிா். புகாரின் பேரில் ராம்ஜிநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com