திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 257 பள்ளிகளில் 32 ஆயிரம் பிளஸ் 2 மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தோ்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியான நிலையில் பிளஸ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 257 மேல்நிலைப்பள்ளிகளில் 14,723 மாணவா்களுக்கு, 17,333 மாணவிகளுக்கு என மொத்தம் 32,056 பேருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை முதல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி உத்தரவின்பேரில் பள்ளித் தலைமையாசிரிகள் மேற்கொள்கின்றனா்.