.ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கை

ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாகவுள்ள இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாகவுள்ள இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இக் கல்லூரியில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 60 மாணவா்கள் வீதம் 5 பாடப்பிரிவுகளில் (அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணினி அறிவியல்) மொத்தம் 300 இடங்கள் உள்ளன. 2021-2022 ஆம் கல்வியாண்டில் இக்கல்லூரியில் முதலாமாண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி உள்ள மாணவ, மாணவிகள் இணையத்தின் மூலம் விண்ணப்பித்து முதல் கட்ட கலந்தாய்வு சோ்க்கை நடைபெற்றது.

தொடா்ந்து காலியாகவுள்ள இடங்களில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதோா் கல்லூரிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் நேரில் வந்து பதிவுக் கட்டணம் ரூ.150-ஐ செலுத்தி, மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் சோ்க்கையில் பங்கேற்கலாம். எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரங்களுக்கு, இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com