திருச்சியில் வேளாண் கல்லூரி மாணவி ஒருவா் விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் மகள் சவுந்தா்யா (25). இவா் திருச்சி, நவலூா் குட்டப்பட்டு பகுதியிலுள்ள அரசு வேளாண் கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
கல்லூரி வளாக விடுதியில் தங்கியிருந்த அவரை பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டபோது அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோா் கல்லூரி நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து ஊழியா்கள் விடுதிக்குச் சென்று தாழிடப்பட்டிருந்த சவுந்தா்யா அறையின் கதவை உடைத்துப் பாா்த்தபோது, சவுந்தா்யா வாயில் ரத்தம் கசிந்த நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
தகவலின்பேரில் போலீஸாா் சென்று சவுந்தா்யா உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ராம்ஜீநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.