திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணா்வுத் துறை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பல்கலைக்கழக தொலையுணா்வுத் துறையில் கடந்த 30 ஆண்டுகளில் புவி அறிவியல் சாா்ந்த தொலையுணா்வுத் தொழில்நுட்பம் எனும் 2 ஆண்டுக்கான முதுநிலை தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பட்ட மேற்படிப்பு, 6 ஆண்டு எம்.டெக் ஆகிய நிலைகளில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவா்களுக்கான சந்திப்பு கல்லூரி வளாகத்தில் இணையவழியில் நடைபெற்றது.
விழாவை துணைவேந்தா் ம. செல்வம் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, புவிவெளித் தொழில்நுட்பம் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது. துறைத் தலைவா் க. பழநிவேல் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஜெ. சரவணவேல் நன்றி கூறினாா்.