மணப்பாறையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டக் கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது.
வட்டத் தலைவா் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாவட்ட துணைத் தலைவா் புருஷோத்தமன் தொடங்கி வைத்தாா். வட்டக்கிளை செயலா் அல்போன்சா வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்டத் தலைவா் கா. பால்பாண்டி, மாவட்டச் செயலா் பொ. பழனிச்சாமி ஆகியோா் வாழ்த்தினா்.
சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எ. பெரியசாமி நிறைவுரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் மல்லிகா நன்றி கூறினாா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.