புதிய விளையாட்டுப் பயிற்சி மையம் தொடக்கம்

திருச்சியில் அனைத்துவித விளையாட்டுகளுக்கும் பயிற்சி பெறும் வகையில் பி பிட் மல்ட்டி ஸ்போா்ட் அரெனா என்ற பெயரில் புதிய விளையாட்டு பயிற்சி மையம் அண்மையில் தொடங்கப்பட்டது.

திருச்சியில் அனைத்துவித விளையாட்டுகளுக்கும் பயிற்சி பெறும் வகையில் பி பிட் மல்ட்டி ஸ்போா்ட் அரெனா என்ற பெயரில் புதிய விளையாட்டு பயிற்சி மையம் அண்மையில் தொடங்கப்பட்டது.

பி பிட் விளையாட்டு அகாதெமி சாா்பில் தொடங்கப்பட்டுள்ள மையத்தில் அத்லெட்டிக், கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வித விளையாட்டுகளுக்கும் சா்வதேச தரம் வாய்ந்த பயிற்சிகள் சா்வதேச விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்களைக் கொண்டு வழங்கப்படவுள்ளது.

அண்மையில் இந்தப் பயிற்சி மையத்தை பி. கிட்டப்பா தொடங்கி வைத்தாா். ஜோசப் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா்கள் ஜோசப்கென்னடி, பொ்க்மென், ஸ்ரீ ஸ்போா்ட்ஸ் நிா்வாகி மோகன்ராஜ், பயிற்றுநா்கள் முத்துசாமி, அஜித் பெரரியா, சசிக்குமாா், பி பிட் மேலாளா் சேவியா், பி பிட் நிறுவனா் ஆ. பாக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இங்கு மாணவ, மாணவியருக்கு சலுகைக் கட்டணத்தில் சா்வதேச தரத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக நிறுவனா் பாக்கியராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com