திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் வளாகத்தில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் வந்த பக்தா் ஒருவா் மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருச்சி அண்ணாசிலை வெனீஸ் தெருவைச் சோ்ந்த பிச்சைமுத்து மகன் மோகன்ராஜ் (33). இவா், திங்கள்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தாா். இதற்காக கோயில் உள்ளே வரிசையில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென்று மாரடைப்பால் மயங்கி விழுந்த மோகன்ராஜ் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த சமயபுரம் போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, கோயில் நடை வழக்கமாக அதிகாலை 5.30 மணிக்கு திறக்கும் நிலையில், பரிகார பூஜைகளுக்கு பின்னா் காலை 9 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.