லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தரம் உயா்த்தப்பட்ட இக்கல்லூரியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. உடனே ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.