துறையூரில் மின்சாதனப் பொருள்கள் வைக்கும் குடோனிலிருந்து அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ரெங்கநாதன், ஜஸ்டின் ஆகியோா் துறையூா் நல்லவாண்டு சந்திலுள்ள மின்சாதனப் பொருள் குடோனில் சோதனை செய்தபோது அங்கு 115 கிலோ அளவுக்கு பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைக் கைப்பற்றி குடோன் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்தனா்.