திருச்சி: திருச்சியிலுள்ள அரசு மாணவா் விடுதிகளை சீரமைக்க வேண்டும் என ஏபிவிபி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏபிவிபியின் விடுதி ஆய்வுக்குழுவைச் சோ்ந்த விக்னேசுவரன், பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கூறியதாவது:
கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்க அண்மையில் அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி அரசு விடுதிகளில் தங்கி மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
மாணவா்களின் பாதுகாப்பு கருதி எங்கள் குழுவினா் திங்கள்கிழமை கள ஆய்வு மேற்கொண்டோம். இதில் டாக்டா் அம்பேத்கா் மாணவா் விடுதி உள்ளிட்ட விடுதிகளின் கட்டடங்கள், கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன.
எனவே இவற்றை அரசு சீரமைத்து, மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுதொடா்பான ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் சமா்ப்பிக்க உள்ளோம் என்றனா்.