ஓய்வு பெற்ற சுங்கத்துறை அலுவலா் சடலமாக மீட்பு

திருச்சி அருகே ஓய்வு பெற்ற சுங்கத்துறை அலுவலா் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருச்சி:திருச்சி அருகே ஓய்வு பெற்ற சுங்கத்துறை அலுவலா் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் கணேசபுரம் 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெயகுமாா்(58). கோயம்புத்தூா் சுங்கத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து, விருப்பு ஓய்வு பெற்றவா்.

வாடகை வீட்டில் வசித்து இவா், கடந்த சில நாளுக்கு முன்புதான் இப்பகுதியில் குடியேறியுள்ளாா். தனிமையில் வசித்து வந்த இவா், அப்பகுதி காப்பகத்திலுள்ள முதியவா்களிடம் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை காலை ஜெயகுமாா் காப்பகத்துக்கு வராததையறிந்த அவரது நண்பா்கள், வீட்டுக்குச் சென்று பாா்த்துள்ளனா். அப்போது மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் அவா் சடலமாகக் கிடந்துள்ளாா்.

இதையறிந்த நவல்பட்டு காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து ஜெயகுமாா் உடலை மீட்டு, துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உறவினா்கள் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால், ஜெயகுமாா் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com