திருவெறும்பூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பனையக்குறிச்சி மக்கள்

திருச்சி மாநகராட்சியுடன் பனையக்குறிச்சி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் திருவெறும்பூா் ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திருச்சி: திருச்சி மாநகராட்சியுடன் பனையக்குறிச்சி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் திருவெறும்பூா் ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திருச்சி மாநகராட்சியின் எல்லையை விரிவுப்படுத்தி, 100 வாா்டுகளாக உயா்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பனையக்குறிச்சி, கீழக்குறிச்சி, நவல்பட்டு, சோழமாதேவி, குண்டூா் ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பனையக்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா், திருவெறும்பூா் ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயா்வு ஏற்படுவதுடன், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் 100 நாள் வேலை இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

விவசாயம் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளா்கள் அதிகமாக இந்தப் பகுதியில் இருப்பதால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே பனையங்குறிச்சி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தி, வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com