வால்பாறை: முடீஸ் எஸ்டேட் பஜாா் பகுதியில் பகல் நேரத்தில் சிறுத்தை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன.
சமீப காலமாக வால்பாறை நகா் பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிா்த்து வருகின்றனா். இந்நிலையில் வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் பஜாா் குடியிருப்புப் பகுதியில் புலி நடந்து சென்றுள்ளது.இதனை சிலா் செல்லிடப்பேசியில் பதிவு செய்துள்ளனா்.
பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.