திருச்சி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான எல். அடைக்கலராஜின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி ஜென்னி பிளாசா வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. ஜவஹா் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். நிகழ்வில், மாநிலத் துணைத் தலைவா் சுப. சோமு, அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் லெனின் பிரசாத், மாவட்டப் பொருளாளா் ராஜா நசீா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள் ஹேமா, முல்லைநாதன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ரெக்ஸ், மாநிலப் பொதுச் செயலா்கள் வழக்குரைஞா்கள் இளங்கோவன், எம் சரவணன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சந்தான கிருஷ்ணன், முரளி, லட்சுமணன், சிக்கல் சண்முகம், மெய்யநாதன், புத்தூா் சாா்லஸ், உறையூா் எத்திராஜூ, கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ரவி, ராஜ்மோகன், ஜோசப் ஜெரால்டு, சிவா, சேவாதளப்பிரிவு அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, ஜெயப்பிரியா, மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.