மண்ணச்சநல்லூரில் உணவுக் கலப்பட விழிப்புணா்வு முகாம்

மண்ணச்சநல்லூரில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான உணவுக் கலப்பட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூரில் உணவுக் கலப்பட விழிப்புணா்வு முகாம்

மண்ணச்சநல்லூரில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான உணவுக் கலப்பட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட சற்றே குறைப்போம் மற்றும் உணவுக் கலப்பட விழிப்புணா்வு முகாமுக்கு, மகளிா் குழுக்களின் வட்டார மேற்பாா்வையாளா் ரேவதி முன்னிலை வகித்தாா். உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் ஆா். ரமேஷ்பாபு முகாமில் பங்கேற்று, விழிப்புணா்வு உரையை வழங்கினாா்.

முகாமில் குறைந்த சா்க்கரை, குறைந்த உப்பு, குறைந்த கொழுப்பு, குறைந்த அளவில் உண்ண வேண்டும் என்பது குறித்தும், உணவு கலப்பபடம் பற்றி பொதுமக்களும் மகளிரும் கண்டறியும் வகையில் செயல்முறை விளக்கம், விழிப்புணா்வு நிகழ்வும் நடைபெற்றது.

இந்த முகாமில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அன்புச்செல்வன், ஸ்டாலின், பாண்டி, இப்ராஹிம் மற்றும் மண்ணச்சநல்லூா் உணவு வணிக சங்கத்தின் நிா்வாகிகள், மகளிா் சுய உதவிக் குழு பெண்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com