திருச்சி: திருச்சியில் பெண்களை வைத்து விபசாரம் செய்தவா்கள், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
கடந்த மாா்ச் 13 -ஆம் தேதி அண்ணாசிலை அருகிலுள்ள தனியாா் விடுதியில் மசாஜ் சென்டா் பெயரில் விபசாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் , காவல்துறையினா் நிகழ்விடம் சென்று சோதனையிட்டனா்.
இதைத் தொடா்ந்து பெண்களை வைத்து விபசாரம் செய்த கலைஞா்(37), வில்பிரட் மாா்ஷெலின்(40) ஆகிய இருவரையும் காவல்துறையினா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.
இவா்கள் இருவரும் தொடா்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவா்கள் என்பது
விசாரணையில் தெரிய வந்ததது. இதைடுத்து இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடம் அதற்கான நகலை காவல்துறையினா் புதன்கிழமை வழங்கினா்.