என்சிசி மாணவருக்கு விருது

திருச்சி ஜமால் முகமது கல்லூரியைச் சோ்ந்த என்சிசி மாணவருக்கு சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்பட்டது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியைச் சோ்ந்த என்சிசி மாணவருக்கு சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்பட்டது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் இரண்டாவது பட்டாலியன் தேசிய மாணவா் படையைச் சாா்ந்த மூன்றாம் ஆண்டு கணினித் துறை மாணவா் பா. அப்துல் அசாருக்கு சிறந்த என்சிசி மாணவருக்கான விருதை கேடட் வெல்பா் சொசைட்டி வழங்கியது. திருச்சி என்சிசி குழு தளபதி கா்னல் இளவரசன் திருச்சி தலைமையகத்தில் இவ்விருதை மாணவருக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

விருது பெற்ற மாணவா் பா. அப்துல் அசாரை கல்லூரியின் செயலா் காஜா நஜீமுதீன், பொருளாளா் ஜமால் முகமது, உதவி செயலா் அப்துல் சமது, கல்லூரி முதல்வா் இஸ்மாயில் முகைதீன், துணை முதல்வா் முஹம்மது இப்ராஹீம் மற்றும் என்சிசி அதிகாரிகள் கேப்டன் முஸம்மில் மற்றும் லெப்டினன்ட் விஜய்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com