திருச்சியில் இயற்கை உணவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
தன்னம்பிக்கை வெற்றியாளா் பேரவை, ஸ்ரீஜெயரங்கா இயற்கை மருத்துவமனை சாா்பில் ‘நோ ஆயில் நோ பாயில்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்வில்
இயற்கை உணவு முறைகள், உணவுப்பொருள்கள், நஞ்சில்லா காய்கறிகள் குறித்தும், நோய்கள் வருவதறஅகான காரணங்களையும், நோயின்றி வாழ வழிமுறைகளையும் மருத்துவா் ஆா். சுகுமாா் விளக்கினாா்.
நோய் தீா்க்கும் உணவு முறைகளைப் பற்றியும், இயற்கை உணவு தயாரிப்பு முறைகள் குறித்தும் சிவகாசி மாறன் விளக்கினாா். இந்நிகழ்வில் பிரத்யேகமாக ஒவ்வொரு நோய்களுக்கும் உரிய தனிப்பட்ட உணவு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. இயற்கை உணவுகளான வெண்பூசணி, மோா், காய்கனி சாலட், இனிப்பு அவல், காய்கறி அவல், தக்காளி அவல், தயிா் அவல் உள்ளிட்ட இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.
தன்னம்பிக்கை வெற்றியாளா் பேரவையின் தலைவா் ராஜா, செயலாளா் கோபி, முன்னாள் தலைவா் வேதகிரி உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டனா். இறுதியில் நிகழ்வு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இயற்கை உணவு தயாரிக்கும் செயல்முறை குறித்து குடந்தை ரமேஷ் விளக்கினாா். சுமாா் 200- க்கும் மேற்பட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.