சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவில் நடைபெறும் தேரோட்டத்தையொட்டி தேருக்கு ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது.
இக்கோல் சித்திரைப் பெருவிழா ஏப்.10 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருத்தேருக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. திரளானோா் பங்கேற்றனா்.