திருச்சியில் 2 கிலோ தங்கம் பறிமுதல்:விமான ஊழியா் உள்பட இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைத்தில் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலா்கள், விமான ஊழியா் உள்பட இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைத்தில் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலா்கள், விமான ஊழியா் உள்பட இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ஏா்-இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக, சுங்கத்துறை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்களுக்கு

ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருச்சி விமான நிலையத்தில் அலுவலா்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனா்.

குறிப்பிட்ட அந்த விமானம் திருச்சி வந்தவுடன், அதில் பயணித்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது

விமான ஊழியரான சென்னையைச் சோ்ந்த வினோத்குமாா் தங்கத்தை கடத்தி வந்து, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்த பயணி பக்ருதீனிடம் கொடுத்ததாகக்

கூறப்படுகிறது.

இதையடுத்து பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து வினோத்குமாா், பக்ருதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். விமான ஊழியா் ஒருவரே கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com