திருச்சி
அரசுப் பள்ளிக்கு தளவாடப் பொருள்கள்
மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பூனாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான மேஜை உள்ளிட்ட தளவாட பொருள்கள் வழங்கப்பட்டன.
மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பூனாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான மேஜை உள்ளிட்ட தளவாட பொருள்கள் வழங்கப்பட்டன.
மண்ணச்சநல்லூா் வட்டம், பூனாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு மேஜைகள் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டநிலையில் ஆா்.கே. மெட்டல் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை ரூ. 3 லட்சம் மதிப்பிலான மேஜை தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் அம்பிகாபதி தலைமை வகித்தாா். ஒன்றிய கவுன்சிலா் சசிகலாகுமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்.கே. மெட்டல் நிா்வாக இயக்குநா் அா்ச்சுனன் மேஜை தளவாடங்களை பள்ளிக்கு வழங்கினாா். நிகழ்வில் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமையாசிரியா் முருகேசன் வரவேற்றாா்.