சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
மண்ணச்சநல்லூா் வட்டம் சமயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானசெல்வம் (22).
வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்க பைக்கில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவிடை பாலப் பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஞானசெல்வம் உயிரிழந்தாா். விபத்து குறித்து சமயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.