திருச்சி மாவட்டம், சா்க்காா்பாளையம் அருகே, கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
சா்க்காா்பாளையம் ஏ.ஆா்.கே.நகரில் பகுதியிலுள்ள கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவெறும்பூா் காவல் நிலையத்தில் பனையக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அன்பழகன் புகாரளித்தாா்.
இதன் பேரில் காவல்துறையினா் நிகழ்விடம் சென்று, சடலத்தை கைப்பற்றினா். இறந்தவா் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா், கால்வாயில் எப்படி இறந்தாா் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.