தூக்கில் தொங்கியஇளைஞா் சடலமாக மீட்பு

உப்பிலியபுரம் அருகே தூக்கில் தொங்கிய இளைஞா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

உப்பிலியபுரம் அருகே தூக்கில் தொங்கிய இளைஞா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் செ. முருகானந்தம் (21). இவா் அதே ஊரில் பால் வியாபாரியிடம் வேலை செய்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை ஒட்டம்பட்டிக்கு பால் கறப்பதற்காக சென்ற முருகானந்தம், அப்பகுதியிலுள்ள வாரி அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்த உப்பிலியபுரம் காவல் நிலையத்தினா் சடலத்தை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com