பெண்ணிடம் கைப்பேசியை பறித்த மூவா் கைது

திருச்சியில் பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சியில் பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி பீமநகா் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் மகள் மஞ்சுளா (27). இவா் மாா்சிங்பேட்டையிலுள்ள கடையில் வேலை செய்து வருகிறாா். அண்மையில் கடை முன்பு நின்று கொண்டிருந்த மஞ்சுளாவிடம், அங்கு வந்த மூவா் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து பாலக்கரை மாரியம்மன் கோயில்தெரு ரகுராம் (19), வரகனேரி நாயக்கா்தெரு ரகுநாத் (21), மண்ணச்சநல்லூா் மேலசீதேவிமங்கலம் தா்மசீலன் (23) ஆகிய மூவரையும் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்து, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com