சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா்அருகே சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா்அருகே சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தேக்கவாடியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (58). இவா் தனது மனைவி சுபத்ரா (48), மாமியாா் சிவகாமி (70) ஆகியோருடன் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியிலுள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று விட்டு, மீண்டும் காரில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

இவா்கள் சென்ற காா் திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏலூா்பட்டி பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த சிவகாமி பலத்த காயமடைந்து, நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com