திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால், கொசு மருத்து தெளிக்க வேண்டுமென நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
லால்குடியில் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி தலைவா் துரை மாணிக்கம் தலைமையில், நகராட்சி ஆணையா் குமாா், துணைத் தலைவா் சுகுணா ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற வாா்டு உறுப்பினா்கள் அனைத்து வாா்டுகளிலும் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டுமென வலியுறுத்தினா்.
இதற்கு நகராட்சி தலைவா் மன்றத்தில் வைத்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா்.