போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

திருச்சியில் மாநகர காவல்துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பெண்கள்- ஆண்கள்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பெண்கள்- ஆண்கள்.

திருச்சியில் மாநகர காவல்துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியை மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஆரோக்கியசாமி சேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 8 பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியிலிருந்து தொடங்கிய ஓட்டம் மேலரண் சாலை, மரக்கடை, மதுரை சாலை, பாலக்கரை, மேலப்புதூா், தலைமை அஞ்சல் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக 10 கி.மீ. தூரத்தை கடந்து மொராய் சிட்டியுடன் நிறைவடைந்தது.

போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள், பணிக்குச் செல்வோா் என சுமாா் 1,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வென்றோருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com