போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவா் கைது

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு மலேசியா செல்ல இருந்த திருச்சி மாவட்டம் மருங்காபுரி, வேம்பனூா் அருகேயுள்ள அய்யங்காடு தெருவை சோ்ந்த ஏ. இளங்கோவன் (39) , போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்து கடவுச்சீட்டு பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com